உசிலம்பட்டி: பரோலில் வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை

73பார்த்தது
உசிலம்பட்டி: பரோலில் வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி தென்காலபட்டி தென்காலநகரை சேர்ந்த சிவநாதன்தியின் மகன் முருகன் (23) என்பவர் செக்கானூரணி பொன்ராஜ் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் பரோலில் வெளியே வந்தார். திருச்சியில் மனைவியுடன் வசித்துவந்தார். 

அவர் பெற்றோரை பார்க்க தென்காலபட்டிக்கு வந்திருந்தார். அங்கு குடிபோதையில் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் அவர்கள் கோபித்துக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருடைய தந்தை சிவபாண்டி வந்து பார்த்தபோது முருகன் இறந்து அழுகிய நிலையில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தந்தை சிவபாண்டி செக்கானூரணி காவல்நிலையத்தில் நேற்று (பிப்.4) புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி