மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழுமலை, உத்தப்பநாயக்கனூர், வாலாந்துறை, செக்கானூரணி பகுதிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு அதிரடி சோதனை நேற்று (ஜூன். 7) நடைபெற்றது.
உசிலம்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து கிராமம் கிராமமாகச் சென்று கடைகள், வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் உசிலம்பட்டி நந்தவனம் தெருவில் எம்.சாண்ட் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.