மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அனுஷா தேவி அறக்கட்டளை சார்பாக 1008 திருவிழாவுக்கு பூஜை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
அறக்கட்டளை மகாலட்சுமி தர்மராஜ் கல்லூரி தலைவர் ராஜகோபால் உப தலைவர் ஜெயராம் கல்லூரி செயலாளர் விஜயராகவன்
முதல்வர் முனைவர் ராமசுப்பையா பேராசிரியைகள் தேவி பூமா , மல்லிகா பொருளாதார துறை உதவி பேராசிரியை முனைவர் விஷ்ணு சுபா, சுயநிதி பிரிவு தமிழ் துறை உதவி பேராசிரியை முனைவர் பரிமளா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.