திருப்பரங்குன்றம்: கோவில் உண்டியலில் 245 கிராம் தங்கம்.

63பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நேற்று (மார்ச். 26) கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்யபிரியா பாலாஜி, துணை கமிஷனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் யாவும் திறந்து எண்ணப்பட்டது.

இதில் கோவில் உள்துறை சூப்பிரண்டுகள் சுமதி, சத்தியசீலன், அலுவலக சூப்பிரண்டு ரஞ்சனி, கோவில் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன். பேஷ்கார்கள் புகழேந்தி, நெடுஞ்செழியன் உட்பட கோவில் ஊழியர்கள், சிவாகாம வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர் பேரவையினர் மற்றும் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ. 72லட்சத்து 39ஆயிரத்து 338 ரூபாய் ரொக்கமாக கிடைத்தது. மேலும் 245கிராம் தங்கமும், 3கிலோ 760கிராம் வெள்ளியும் கிடைத்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி