திருநகர்: டிபன் சென்டரில் மிக்ஸி திருடிய இருவர் கைது

78பார்த்தது
திருநகர்: டிபன் சென்டரில் மிக்ஸி திருடிய இருவர் கைது
மதுரை திருநகர் ஜி.எஸ்.டி. சாலையில் ரவிச்சந்திரன் (60) என்பவர் டிபன் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் கடையை பூட்டாமல் சாத்து வைத்துவிட்டு மார்க்கெட்டுக்கு சென்றிருந்தார். 

திரும்பி வந்து பார்த்தபோது கடை திறக்கப்பட்டு கடையிலிருந்த மிக்ஸி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழங்காநத்தம் முத்துப்பட்டி மலைச்சாமி மகன் தங்கராஜ் (30), திருப்பரங்குன்றம் மேட்டுத்தெரு முருகேசன் மகன் குமார் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று (மார்ச் 26) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி