மரத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.

64பார்த்தது
மரத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.
மதுரை அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (77). இவருக்கு மதுரை அருகேயுள்ள நாகமலைபுதூரில் சொந் தமான வீடு, தோட்டம் உள்ளது. பாண்டியராஜ் புதன்கிழமை இந்தத் தோட்டத்துக்கு வந்தார். அப்போது தோட்டத்தில்
உள்ள மரத்தில் ஏறி முருங்கைக்காய் பறிக்க முயன்ற போது சுமை தாங்காமல் மரத்தில் இருந்த பாண்டியராஜ் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி