நாளை மறுநாள் பசுமை நடை பயணம்.

50பார்த்தது
நாளை மறுநாள் பசுமை நடை பயணம்.
மதுரையில் நாளை மறுநாள் ஆக. 4 ம்தேதி விராட்டிபத்து ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் பசுமை நடை பயணம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிறன்று பசுமை நடை பயண குழுவினர் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த இடங்களை நோக்கி பசுமை நடை பயணம் மேற்கொள்வது வழக்கம்.

அதன் அடிப்படையில் இம்மாதம் நாளை மறுநாள் 4ம்தேதி விரட்டிபத்து ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் பசுமை நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

இதில் நாம் இதுவரை அறியப்படாத பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் காளவாசல் பி. பி சாவடியில் உள்ள பி டி ஆர் தேநீர் நிலையம் அருகே நாளை மறுநாள் ஆக. 4 ம் தேதியன்று காலை 6: 15 மணிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி