மதுரை பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் ஆசிரியர் வீட்டில் 20. பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடி மண்டலா நகர் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன். ( 50 ) என்பவர் செம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவரது மனைவியின் தவமணி ( 47) கழுவன்குளம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு அனுவித்யா என்ற மகளும் அருண் என்ற மகளும் உள்ளனர்.
காலையில் கார்த்திகேயன் தவமணி பள்ளிக்கு வேலைக்கு கிளம்பி சென்றுள்ளனர்.
அனுவித்யா பொறியியல் கல்லூரிக்கும் அவரது தம்பி, அருண் பள்ளிக்கும் கிளம்பி சென்றுள்ளனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் கார்த்திகேயன் மகள் அனுவித்யா கல்லூரி முடித்து திருப்பி வரும்போது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிகிடப்பதை பார்த்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதனை எடுத்து கார்த்திகேயன் மற்றும் தவமணி ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்து பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது.
வீட்டிலிருந்த 20 பவுன் தங்க நகை, மற்றும் பணம் 4 லட்சம் கொள்ளையடித்தப்பட்டது. நகை, பணம் இவற்றின் மெத்த மதிப்பு 22 லட்சம்.
இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்..