மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச். 19) காலை சுப்பிரமணியசாமி மற்றும் தெய்வானையுடன் மகாதேரோட்டம் நிகழ்வு நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் பக்தர்கள் வெயிலில் வாட்டி வதங்கிய நிலையில் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் விதமாக திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள ஹஜ்ரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் உறுப்பினர்கள் வெயில் வாட்டிய நிலையில் பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து பக்தர்களின் தாகத்தை தணித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் உறுப்பினர்கள் தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து தாகத்தை தணித்தது சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக அமைந்துள்ளது.