மதுரை: சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வில் எம்எல்ஏ.

85பார்த்தது
மதுரை: சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வில் எம்எல்ஏ.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணக்க நிகழ்ச்சியில் மாவட்ட கட்சி தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார். அபுதாகிர் வரவேற்புரை கூறினார். 

மாநில பொதுச் செயலாளர் அகமது நவமி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரை கத்தோலிக்க திருச்சபை அருள்தந்தை பால் பிரிட்டோ, மதுரை டவுன் காஜி சபூர் முகையதின், வள்ளலார் சமூக அறக்கட்டளை நிறுவன தலைவர் சக்தி அரிகரன் ஆகியோர் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி