மதுரை: ஆளுநரை சந்திப்பது வதந்தியே. பாஜக தலைவர் பேட்டி.

67பார்த்தது
திருநெல்வேலி செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து நேற்று (ஏப். 15) மாலை விமான மூலம் மதுரை வந்தடைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கட்டுப்படுத்துவது குறித்த கேள்விக்கு

ஜனநாயக நாட்டில் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. பேச்சு சுதந்திரம் மிகப்பெரியது. இது அடக்குமுறை செய்வது கண்டிக்கத்தக்கது.

ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்படுவது குறித்து:

ஆளுநரை சந்திப்பது குறித்தது புரளிதான்.

கல்லூரி விழாவில் மாணவர்களிடம் ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியது குறித்த கேள்விக்கு

ஆளுநர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. அதை பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு

பொள்ளாச்சி ஜெயராமனிடம் இன்று பேசினேன். அவர் எனக்கும் சீனியர் அதிமுக கிளைச்செயலாளர் வரை எனக்கு தெரியும். நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.

நெல்லையில் பள்ளி மாணவன் தாக்குதல் குறித்த கேள்விக்கு?

நெல்லையில் பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பிரச்சினை வரும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி