மதுரை: ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை கூறிய எம்.பி

78பார்த்தது
மதுரை: ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை கூறிய எம்.பி
மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் 33 ஆண்டு விழா நேற்று (மார்ச். 22) நடைபெற்றது. இந்த விழாவிற்கு வில்லாபுரம் சங்கவிநாயகர் கோவில் நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், அவனியாபுரம் நகர மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி, பயணியர் பள்ளி தாளாளர் டேனியல், மாமன்றக் உறுப்பினர் குட்டி என்ற ராஜரத்தினம், சர்க்கீல் கமிட்டி தலைவர் செல்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாணவர்களிடம் கூறும்போது, "மாணவர்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய செல்வம். கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய கல்வியை நன்கு பயன்படுத்த வேண்டும்" என்றார். விழாவில் பள்ளித் தாளாளர் பொன்னிறகுபதி நன்றியுரை கூறினார். பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி