மதுரை: ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி

77பார்த்தது
மதுரை: ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று (மார்ச். 13) இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் அன்னை தெய்வானை எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி