மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் (மே. 12) நடைபெற உள்ள நிலையில் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருக்கும் கள்ளழகர் பக்தர்கள் கள்ளழகர் போல வேடமணிந்து தண்ணீர் பீச்சி அடிப்பது வழக்கம். அதற்கான பொருள்களை வாங்குவதற்கு அவனியாபுரம் பேருந்து நிலைய பகுதிகளில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் மூங்கில் பட்டு தலைப்பாகையையும் தண்ணீர் பீச்சியடிக்கும் ஆட்டு தோல் பைகளையும் வாங்கி வருகின்றனர்.