மதுரை: கிரிவலப்பாதயில் பக்தி வாசகங்கள், ஓவியங்கள்

69பார்த்தது
மதுரை: கிரிவலப்பாதயில் பக்தி வாசகங்கள், ஓவியங்கள்
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை சுவர்களில் முருகப்பெருமான் ஓவியங்கள், பக்தி வாசகங்கள் கடந்த சில நாட்களாக எழுதப்பட்டு வருகின்றன. இங்கு பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி பகுதி மக்கள் தினமும் 'வாக்கிங்' செல்கின்றனர். இந்நிலையில் கந்தசேனா அமைப்பினர் கிரிவலப் பாதையின் இருபுறமும் உள்ள சுவர்களில் கட்டட உரிமையாளர்களின் சம்மதம் பெற்று திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர்துதி, அரோகரா கோஷங்கள், 108 கந்தன் போற்றி, ஓம் மந்திரம், வேல், மயில், சேவல் ஓவியங்களுடன் பக்தர்களின் கருத்தை கவரும் வகையில் முருகப்பெருமானின் ஓவியங்களும் வரைந்து வருகின்றனர். கிரிவலம் செல்லும்போது பக்தி சிந்தனையை மேலோங்க செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 இடங்களில் எழுதப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையை சுற்றி 100 இடங்களில் பக்தி வாசகங்கள் எழுத உள்ளோம் என இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி