மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சோளங்குருணி கண்மாயில் நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் மூலம் கம்பிக்குடி செல்வதற்காக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதில்
சோளங்குருணி கண்மாய் முழுவதும் நிறைந்த நிலையில் கிழக்குப் பக்கம் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவிற்கு நீர் புகுந்தது. இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்திரி, வெண்டை , கடலை மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். இதனால் நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவானது.
கடந்த நான்கு வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் சோளங்குருணி கண்மாயில் கிழக்கு பக்கம் வடிகால் கால்வாய் இல்லாததால் நீர்கள் விவசாய நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது இது குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு இடங்களில் மக்கள் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கை எடுத்த வில்லை ஏன் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீர் தங்கள் விவசாய விளை நிலங்களில் புகுந்து விடுவதால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன என்றனர்