மதுரை திருப்பரங்குன்றம் மலை சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக இன்று( பிப். 4) இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இன்று பாஜக மற்றும் இந்து முன்னணியினர் ஒவ்வொருவராக முருகன் கோவில் உள்ளே அமர்ந்து மொத்தமாக சேர்ந்து கோவிலில் இருந்து வெளியே வரும்போது கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இது போல திருப்பரங்குன்றம் நகரில் ஆங்காங்கே கூடியிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர் இது வரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படுகிறது.