மதுரை: விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்.

67பார்த்தது
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறை சார்பாக விமான நிலைய வெளி வளாக பகுதியில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் விமான நிலைய நுழைவு வாயிலேயே நிறுத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனைக்குப் பிறகு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில்மத்திய திறவு பாதுகாப்பு படை விமான நிலைய அலுவலகம் வெளிவளாகும் ஓடுபாதை உள்ளிட்ட மூன்று இடங்களிலும் தமிழக போலீசார் செக்போஸ்ட் மற்றும் வெளிவராக பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்திற்கு நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி