திருமங்கலம்: திருமங்கலம்-வாடிப்பட்டிக்கு மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும்
திருமங்கலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள திருமங்கலம் வாடிப்பட்டி டவுன் பஸ் மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருமங்கலம் அதிலிருந்து செக்கானூரணி சோழவந்தான் வழியாக வாடிப்பட்டி வரையில் டவுன் பஸ் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இயகப்பட்டது.
தடம் எண் 999 என்ற எண்ணில் இயக்கப்பட்ட இந்த டவுன் பஸ் ஏறி வாடிப்பட்டி திருமங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் சென்று வந்தனர். நிறுத்தப்பட்டு தற்போது 12 ஆண்டுகளாக திருமங்கலம் சோழவந்தான் மட்டும் பஸ் சென்று வருகிறது. அதனால் வாடிப்பட்டி செல்ல விரும்புவோர் சோழவந்தான் சென்று மீண்டும் மற்றொரு பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது இதனை போக்க ஏற்கனவே இயக்கப்பட்டது போல் திருமங்கலம் வாடிப்பட்டி பஸ்ஸை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் அரசு பேருந்து கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.