திருமங்கலம் மொச்சிகுளத்தில் மலையாள பகவதி பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி மாரிச்சாமி நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து கோவில் கதவை மூடிவிட்டு சென்றார்.
நேற்று காலையில் வந்து பார்த்த போது பூட்டு உடைத்து கிடந்தது உள்ளே உண்டியல் மற்றும் கிரில் கேட்டு உடைக்கப்பட்டு இருந்தது ஆனால், உண்டியல் பணம் மற்றும் எந்த பொருட்களும் திருடு போகவில்லை.
இது குறித்த புகாரில் கள்ளிக்குடி போலீசார் கோவில் திருட முயன்ற நபர்களை தேடி வருகின்றனர்.