சாப்டூர் வனப்பகுதியில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் வனப்பகுதி் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இங்கு புலி சிறுத்தை யானை கரடி வரையாடுகள் மான் மீளா செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
சமீப காலமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, புலி யானை வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்த உள்ளது இதன் மூலம் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.