திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வங்கியில் சிலைமானை சேர்ந்த நந்தகுமார் ஊழியராக இருந்தார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு மகளிர் குழுவில் 10 பேர் உறுப்பினர் உள்ளதாக போலியாக ஆவணங்களை தயார் செய்து ரூ 4 லட்சத்து 40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். முதல் தவணைத் தொகையை வசூலிக்க சென்ற ஊழியர்கள் குறிப்பிட்ட மகளிர் குழு நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் கடன் வாங்கவில்லை என தெரிவித்தனர். பின்னர் வங்கியின் விசாரணையில் நந்தகுமார் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
வங்கி லோன் பிரிவு மேலாளர் சதீஷ் கண்ணன் புகாரில் வழக்குபதிவு செய்து போலீசார் நந்தகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.