பள்ளியில் குடிநீர் குடித்த மாணவர்களை கடித்த நாய்கள்
திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர் முத்து, 10ம் வகுப்பு மாணவர் பழனிக்குமார் இருவரும் நேற்று பள்ளி வளாக குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது நாய் ஒன்று திடீரென இருவரையும் கடித்துக்கு குதறியது 2 மாணவர்களை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பகுதியில் 68 பேரை தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனே நாய்களை அப்புறப் படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.