மேலூர் அருகே விஷம் அருந்தி இளைஞன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெளுத்துக்கரைப்பட்டி பகுதியில் 27 வயதுடைய இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். பின் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.