மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.