மேலூர் அருகே வஞ்சிநகரம் அருகில் உள்ள வீரசூடாமணி பட்டியை சேர்ந்தவர் 67 வயதுடைய நபர் இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு விடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று முல்லாமலை ஊரணியில் இவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.