மதுரை மாவட்டம் அழகர் கோவில் செல்லும் வழியில் செல்லும் கள்ளத்திரி பாசன கால்வாயில் தற்போது வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் கள்ளந்திரி 9வது பிரிவு பகுதியில் குளிக்க சென்ற பலர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் 'எனது தம்பியின் உயிரை இந்த கால்வாயில் பறிகொடுத்து விட்டேன். இது ஆழமான பகுதி, இங்கே யாரும் குளிக்க வேண்டாம்' என உயிரிழந்த நபரின் சகோதரர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளார்.