மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள ஸ்ரீ திருப்பதி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் திருவாதவூர் முடக்கு சாலை முதல் மதுரை சாலை வரை நடைபெற்றது. நேற்று 18ஆம் தேதி மாலை நடுமாடு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 15 மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. சின்னச்சாமி அம்பலம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் முதல் பரிசு, வெள்ளியங்குன்றம் பாலா நாவினிப்பட்டி பொன் ராஜேந்திரன் 2வது பரிசும், திருவாதவூர் தன்வந்த பிரசாத், வெள்ளரிப்பட்டி அழகு 3வது பரிசும், தேனி பாலார்பட்டி சின்ன மாயத்தேவர் 4வது பரிசு பெற்றனர். பெரிய மாட்டு வண்டியில் 8 வண்டிகள் கலந்து கொண்டன.
திருவாதவூர் தன்வந்த பிரசாத் முதல் பரிசும், ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன் இரண்டாம் பரிசும், திருவாதவூர் எஸ். எம் பிரதர்ஸ் பதினெட்டான் அம்பலம் மூன்றாம் பரிசும், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி சுண்ணாம்பூர் வீரணன் அம்பலம் நான்காம் பரிசு பெற்றனர். சிறிய மாட்டில் 31 ஜோடிகள் கலந்து கொண்டன. முதல் சுற்றில் 16 ஜோடிகள் கலந்து கொண்டன. தேனி சின்னமனூர் சுகன்யா, அ. வல்லாளப்பட்டி இளந்தேவன் முதல் பரிசும், தேனி முத்தாலபுரம் சரவணன் வேல், தெய்வம் இரண்டாம் பரிசும், மதுரை பாண்டி கோவில் பாண்டியராஜன், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி மூன்றாம் பரிசு பெற்றனர்.