மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி கிராமம் கதவு எண் 2/71 சின்ன கொட்டாம்பட்டி என்ற முகவரியை சேர்ந்த பாக்கியம் மற்றும் அவருடைய கணவர் கணபதி ஆகிய இருவரும் வசித்து வந்த குடிசை வீடு இன்று 19.3.2025 மதியம் சுமார் 2 மணி அளவில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. தீ விபத்து நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த உடைமைகளும், வீட்டு உபயோக பொருட்களும், TN 59 BV 0391 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனமும் தீ எரிந்து சேதம் அடைந்தன. பின்பு அருகே இருந்தவர்களால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயினை அணைத்தனர். மேற்படி நிகழ்வில் உயிர் சேதமோ கால்நடைகள் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.