மேலூர் அருகே கேசம்பட்டி அழகர்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க பகுதி. இப்பகுதியில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அதில் அரியவகை தேவாங்குகள் உள்ளன. இவை தொடர்ச்சியாக சாலை விபத்தில் சிக்கி இறக்கும் நிலை உள்ளது. இப்பகுதி உயிரினங்களை பாதுகாப்பதற்கு பல்லுயிர் மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும், கேசம்பட்டியை பல்லுயிர் தளமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.