அலங்காநல்லூர் அருகே நிறுத்தி இருந்த பைக் மாயம் போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் பாலசுந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மயமாகியுள்ளது. அவர் தேடி பார்த்தும் கிடைக்காததால் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பைக் மாயமானது குறித்து புகார் அளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.