மதுரை மாவட்டம் மேலூரில் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நகரில் நடத்தினர். சிவகங்கை சாலையில் துவங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மேலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகள் அடங்கியவற்றை ஏந்தியபடி மாணவ மாணவியர்கள் ஊர்வலமாக சென்றனர்.