மதுரை மத்திய சிறையில் சிறை காவலர்களுக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த சட்ட விளக்க பயிற்சி வகுப்பு துவக்க விழா
இந்தியா முழுவதும் புதிய முப்பெரும் சட்டங்கள் 1. 7. 2024 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மதுரை மத்திய சிறை சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் விதமாக சட்ட விளக்கப் பயிற்சி வகுப்பு இன்று மதுரை மத்திய சிறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறை துறை DIG பழனி தலைமையில் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை மற்றும்
சிவக்குமார்
சட்ட உதவி தலைமை வழக்கறிஞர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
மற்றும்
சாமி சந்திரசேகரன்
சட்ட ஆலோசகர் சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து சிறை பணியாளர்களுக்கு மூன்று நாட்கள்
1. பாரதிய நீதிச் சட்டம், 2023
2. பாரதிய சாட்சியச் சட்டம், 2023
3. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், 2023
குறித்த சட்டப் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 300 சிறை பணியாளர்கள் கலந்து கொண்டு சட்டப் பயிற்சி பெற உள்ளனர்.