மருந்து கடையில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற இளைஞர்கள்

862பார்த்தது
மதுரையில் மருந்து கடையில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற இளைஞர்கள் - காவல்துறையினர் தீவிர விசாரணை.

மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாடக்குளம் ரோடு பழங்காநத்தம் பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான ராஜா மருந்தகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவருகிறது.

இந்த மருந்தகத்தில் இன்று மதியம் உணவு இடைவேளைக்கு செல்வதற்காக கடை ஊழியர்கள் புறப்பட்டபோது திடீரென மருந்தகத்திற்கு முன்பாக வந்த இளைஞர்கள் இருவர் தாங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை மருந்தகம் நோக்கி வீசியுள்ளனர்.

இதில் நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டானது அருகில் இருந்த குடத்தின் மீது பட்டு உடைந்ததால் அங்கு பணிபுரியக்கூடிய ஊழியர்கள் எந்தவித காயமும் இன்றி தப்பினர்.

இதனையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ராஜா சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென பைக்கில் வந்த இளைஞர்கள் மருந்து கடையில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி