முன்னாள் திமுக மண்டல செயலாளர் வீ.கே.குருசாமியின் ஆதரவாளராகவும், ரவுடியாகவும் வலம் வந்தவர் கிளாமர் காளி (35). பல்வேறு கொலை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது மதுரை கீரைத்துறை, தெப்பகுளம் காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே நேற்றிரவு (மார்ச் 22) வெண்கலமூர்த்தி நகரில் தனது 2வது மனைவி மீனாட்சி வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் இவர் தலை சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். எதிரி ஆன வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என குருசாமியின் தரப்பினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.