மதுரை: அறங்காவலர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம் இல்லை- உயர்நீதிமன்றம்

53பார்த்தது
அறநிலையத்துறை செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ள கோயிலில் - அறங்காவலர் நியமனத்தில் அரசு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயிலின் செயல்திட்டத்தின்படியே அறங்காவலர் நியமனம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கோயில் செயல் திட்டத்துக்கு முரணாக அறங்காவலர் தேர்வு பெயரை மாவட்ட குழுவுக்கோ, அரசின் பரிந்துரைக்கோ அனுப்பக் கூடாது என்றும், கோயிலின் செயல்திட்டப்படி அறங்காவலர் நியமனத்தை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி