பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைப்பு.

586பார்த்தது
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைப்பு.
மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் திரும்ப ஒப்படைப்பு.


மதுரையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் கடந்த 12ம் தேதி நள்ளிரவு பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுக்கான போதுமான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் வாகனமானது நகைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டு கரூவூலத்தில் வைக்கப்பட்டது.


இதனையடுத்து வணிகவரி மற்றும் வருமானவரித்துறை ஆவணங்களை சரிபார்த்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் விடுவிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி