இந்திய-பாக் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு சிறப்பு வழிபாடு

78பார்த்தது
இந்திய - பாக் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் மதுரை பூங்கா முருகன் கோவிலில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடியாக இந்தியாவின் சார்பில் ஆப்ரேசன் சிந்தூர் என்ற தாக்குதல் மூலமாக பாக்கிஸ்தான் பயங்கரவாத இடங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் பாக் நாட்டினர் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டபோது அதனை இந்திய விமானபடை தடுத்துநொறுக்கியது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் மற்றும் உள்ளூர் மக்கள் சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் சித்தர் மகாசபை சார்பில் நேற்று மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவிலில் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

அப்போது ஆப்ரேசன் சிந்தூர் தாக்குதலை இந்தியா சிறப்பாக நடத்த கோரியும், இந்திய ராணுவத்தினர் எவ்வித பாதிப்பும் இன்றி போரில் வெற்றிபெற வேண்டியும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு உரிய பாடம் புகட்ட வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி