ஜல்லிக்கட்டு வழக்கு ரத்து செய்யக்கோரி மனு அளிப்பு

1075பார்த்தது
தல்லாகுளம் பகுதியில் ஜல்லிக்கட்டு வழக்கு ரத்து செய்யக்கோரி முறியடிப்பு குழுவினர் மனு அளிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சில வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படாமல் இருப்பதால் அதனையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி ஜல்லிக்கட்டு போராட்ட முறியடிப்பு குழு சார்பாக இன்று மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென் மண்டல ஐஜி அவர்களை சந்தித்து மனு அளிக்க வருகை தந்தனர் இருப்பினும் ஐஜி இல்லாத காரணத்தால் அலுவலகத்தில் கொடுத்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி