மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்

64பார்த்தது
1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட EPS பென்ஷன் திட்டம் 30 ஆண்டுகள் கடந்தும் வாழ்க்கைக்கு பயனற்ற திட்டமாகவே உள்ளது. அதை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் மதுரை மண்டல EPF அலுவலகம் முன்பு நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய , மாநில அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டது. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 9ஆயிரம் ரூபாய் பஞ்சபடியுடன் வழங்கவேண்டும், பகத்சிங் கோஷியாரி கமிட்டி பரிந்துரைத்த இடைக்கால நிவாரணம் 3ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், மறுக்கப்பட்ட ஆண்டு நிவாரணம் ROC உள்ளிட்ட சலுகைகளை திரும்ப வழங்கவேண்டும், அனைத்து பென்ஷனர்களுக்கும் ESI திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின்படி தகுதி உள்ள அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்கவேண்டும், முதியோருக்கான இரயில்பயண சலுகை வேண்டும், திட்டச்சான்றிதல் படி பென்ஷன் வழங்கும் போது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும் மாநில அரசு அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று EPF மூலம் பென்ஷன் பெறும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அக்கறையுடன் தனி பென்ஷன் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கை அடங்கிய கோரிக்கை மனுவினை மதுரை EPF மண்டல ஆணையரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி