குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற உத்தரவு

160பார்த்தது
தனது கணவரிடம் இருந்து
குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு.


கணவன் மனைவி பிரச்சினையில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதை ஆட்கொணர்வு (HCP) மனுவாக விசாரிக்க முடியாது உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.


குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு.

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜு என்பவர் தனது இரண்டு குழந்தைகளை கணவர் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு போய் வைத்துள்ளார் எனவே எனது மகன் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வாழ்க்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்.

இந்த வழக்கின் மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் முதல் மகன் ஏற்கனவே 18 வயதை பூர்த்தி அடைந்து விட்டார் எனவே அவருக்கு இந்த வழக்கில் நிவாரணம் வழங்க இயலாது அதேபோல் மகளுக்கு ஏழு வயது ஆகிரது. தனது கனவர் ஆனந்த் என்பவர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட்டதாக மனைவி குற்றம் சாட்டுகிறார்.

கணவன் மனைவி உள்ள பிரச்சனையால் குழந்தைகளை அழைத்துச் செல்லப்பட்டதே ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது.

சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி