மதுரை மாநகர் பகுதியில் காலை முதல் மேகமூட்டத்துடன் காட்சி வைத்த நிலையில் மதுரை மாநகர் பழங்காநத்தம் மாடக்குளம் ஜெய்ஹிந்த் புரம் திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பொழிந்தது
இதனால் பணிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது
ஏற்கனவே கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் மிதமான மழையின் காரணமாக ஒரு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது