மதுரை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 30 மனநலம் பாதிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் நேற்று மாலை தனது தந்தையின் மளிகை கடையின் 3-வது மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து குதித்து அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் இங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனநலம் பாதித்த இளைஞர் அறியாமையால் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.