மதுரை: 5000 டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்துவோம்

57பார்த்தது
மதுரை பி. பிகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகர பாஜக அலுவலகத்தில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான கதளி நரசிங்க பெருமாள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில் டெல்லி, சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து பெரிய அளவிலான மதுபான ஊழல் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. அந்த மாநிலங்களில் நடைபெற்ற மதுபான ஊழல் ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்றது.

இது வெறும் ஆயிரம் கோடி ஊழலாக இருக்காது. நன்றாக விசாரித்தால் 40000 கோடிக்கு உள்ள நடந்திருக்க வாய்ப்பு உண்டு. டாஸ்மார்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த பல்வேறு வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை விசாரணையை நடத்தி இருக்கிறது. அனைத்து டாஸ்மார்க்களிலும் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய்க்கு கூடுதல் விலை விற்பனையாகிறது. போலி மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு அது டாஸ்மார்க் கடையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் டாஸ்மார்க் ஊழலை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள டாஸ்மார்க் தலைமையத்தில் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளார். இது தொடக்கம் தான்.

தமிழ்நாட்டில் உள்ள 5000 டாஸ்மார்க் கடைகளையும் நாங்கள் முற்றுகையிடுவோம்", என கூறினார்.

தொடர்புடைய செய்தி