மதுரை: அரசு போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு பதவி உயர்வு

49பார்த்தது
மதுரை: அரசு போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு பதவி உயர்வு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நடத்துநர்களில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது. 

இதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 3 மண்டலங்களில் பணியாற்றும் பேருந்து நடத்துநர்கள் 30 பேருக்கு பயணச் சீட்டு ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநர் வி. சரவணன் தலைமை வகித்து, பயணச் சீட்டு ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அதற்கான உத்தரவை வழங்கினார். போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளர்கள் மணி (மதுரை), முத்துகிருஷ்ணன் (திண்டுக்கல்), கலைவாணன் (விருதுநகர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.