அரசாணை எண் 5-ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும், நியாயமான ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையை வழங்கிடு்இணைப்பேராசிரியர் பணிமேம்பாட்டிற்கு முனைவர் பட்டம் என்ற நிபந்தனையை தளர்த்திட வேண்டும், M. Phil / Ph. Dக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், புத்தொளி/புத்தாக்கப் பயிற்சிக்கான கால நீட்டிப்பை வழங்கிட வேண்டும், பேராசிரியர் பணிமேம்பாடு வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி AUT- MUTA சார்பில் மதுரை ஆரப்பாளையம் பெத்தானியாபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் உள்ளிட்ட பணிமேம்பாட்டிற்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் கூட வழங்கப்படவில்லை இதனை கண்டித்து 4 ஆண்டுகளாக அனைத்துவித போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தர்மபுரி, வேலூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் பணிமேம்பாட்டிற்கான ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அலுவலகத்திலும், கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களிலும் அதிகாரிகளை நேரில் பலமுறை முறையிட்டும் இதுநாள் வரை எந்த பலனும் கிடைக்கப் பெறவில்லை என்றனர்.