மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கி தினமும் காலை , மாலை வேளைகளில் சுவாமி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவது வழக்கம். நேற்று (மே. 8) மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று (மே. 9) காலை தேரோட்டம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (மே. 9) இரவு தேரின் தடம் பார்க்கும் நிகழ்வாக சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் ஆகிய மூவரும் ஒரே சப்தவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வந்தது.
வருடத்தில் ஒருமுறை இம்மாதிரியான சப்பரத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளுவார்கள். எனவே இதனை கண்டு தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் நான்கு மாசி வீதிகளில் குவிந்திருந்தனர்.
மேலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி சிம்மாசனத்திலும், பவளகனிவாய் பெருமாள் கருட வாகனத்திலும் வலம் வந்தனர்.
சுவாமி
மாசி வீதிகளில் பவனி வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.