தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் 2020ஆம் ஆண்டில் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேசனின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணையை 2 மாதங்களில் முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.