அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட களிமங்கலம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு நெல் மூட்டைகள் களிமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீண்ட நாட்களாக நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது பெய்து வரும் மழையில் நனைந்தும், கடுமையான கோடை வெயிலாலும் நெல் மணிகள் காய்ந்து சேதமடைந்து வருகின்றது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் தற்போது வரைக்கும் நெல் கொள்முதல் பணிகளை தொடங்காத நிலையில் உடனடியாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.