மதுரையில் போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு இன்று (ஜூலை. 5) ஒப்பந்த முறையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நியமனத்தை அமுல்படுத்திய திமுக அரசை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுபோல மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.